மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன்.
சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு “ஆளுமை விரும்பி” மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவனை வீரன் என்று கொண்டாடும் ஒரு சமூகம், உள்ளூரில் கொலை செய்தவனை கொலையாளி என்று சிறையில் போடுகின்றது. சமூகத்திற்கு கொலை முக்கியமல்ல, கொலை அதற்கு விருப்பமானதா அல்லது இல்லை என்பது மட்டும்தான். (நன்றி ஓஷோ).
ஒருவரை ஒருவர் ஆளுமைப் படுத்தாத சமதர்ம உலகம் வேண்டுவது உங்களின் (வாலின்) ஆசையாக இருந்தாலும், மதத்தினை நீக்குவதால் மட்டுமே வன்முறை பிரச்சினைகள் தீர்ந்து விடாது. சகோதரத்துவத்தை உலகில் வளர்ப்பதுதான் வன்முறைகளை ஒழிப்பதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
எனவே மதங்களை பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டு, மனிதத்தைப் போற்றுவது எப்படி என்று அதிகம் யோசிப்போம்.
“கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்” என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.
உங்களுக்கு?
சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு “ஆளுமை விரும்பி” மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவனை வீரன் என்று கொண்டாடும் ஒரு சமூகம், உள்ளூரில் கொலை செய்தவனை கொலையாளி என்று சிறையில் போடுகின்றது. சமூகத்திற்கு கொலை முக்கியமல்ல, கொலை அதற்கு விருப்பமானதா அல்லது இல்லை என்பது மட்டும்தான். (நன்றி ஓஷோ).
ஒருவரை ஒருவர் ஆளுமைப் படுத்தாத சமதர்ம உலகம் வேண்டுவது உங்களின் (வாலின்) ஆசையாக இருந்தாலும், மதத்தினை நீக்குவதால் மட்டுமே வன்முறை பிரச்சினைகள் தீர்ந்து விடாது. சகோதரத்துவத்தை உலகில் வளர்ப்பதுதான் வன்முறைகளை ஒழிப்பதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
எனவே மதங்களை பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டு, மனிதத்தைப் போற்றுவது எப்படி என்று அதிகம் யோசிப்போம்.
“கெட்டதை எதிர்ப்பதை விட நல்லதை ஆதரிப்பதுதான் அதிக பலனைத் தரும்” என்று சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதில் உண்மை இருக்கின்றது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.
உங்களுக்கு?

No comments:
Post a Comment